Wednesday, December 7, 2011

அன்னம் பதில்

சமநிலைச் சமுதாயம் டிஸம்பர் மாத இதழில் காஷிபுல் ஹுதா மதரஸாவின் மறுப்புகளுக்கும் சொதப்பல்களுக்கும் அன்னம் வழங்கியுள்ள பதிலை படிக்க கீழே கிளிக் செய்யவும்.
http://writerannam.blogspot.com/2011/12/blog-post.html

Monday, December 5, 2011

அன்பு நிறைந்த ஆலிம்களே நணபர்களே

அன்பு நிறைந்த ஆலிம்களே! நணபர்களே!
பாகியாத்தின் வரலாறு மற்றும் மஸ்லக் பற்றி காஷிபுல் ஹுதாவிலிருந்து வெளிவருவருகிற மனாருக் ஹுதா மாத இதழில் வெளியான செய்திகள் குறித்து பலரும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

உத்தமர்களாவும், புத்திசாலிகளைப் போலவும் வேடமிட்டு புரட்டு வாதம் செய்வோர் அவர்களது ஆட்களை திருப்திப் படுத்துவதற்காக அல்லது தங்களது மனப் புகைச்சலை தீர்த்துக் கொள்வதற்காக " நாங்களும் எழுதிட்டோமல்லே " என்று காட்டுவதற்காக நிறையப் பக்கங்களை பாழ்படுத்தியுள்ளனர்.

எனினும் தொடர்ந்து இவர்கள் எந்த தப்பு வாதங்களை தப்பாது செய்து வருகிறார்களோ அதெற்கெல்லாம் பதிலளிக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை லிபாஸ் உணர்ந்திருக்கிறது. பாகியாத்தின் வரலாறு பாகியாத்தின் மஸ்லக், பாகியாத்திற்கும் தப்லீக்கிற்கும் இடையே உள்ள தொடர்பின் நிலை, மௌலானா யாகூப் விஷாரமி செய்து வருகிற ஒரு தலைப்பட்சமான பொய்ப்பிரச்சாரம் அவர் பயன்படுத்திய குயுக்தியான வழிகள் இன்றைக்கு பாகியாத் அடைந்திருக்கிற பின்ண்டைவு அதை மேம்படுத்து வதற்கான தீர்வுகள் வழிமுறைகளைப் பற்றி விரிவான ஒரு தகவல் கையேட்டை லிபாஸ் தாயாரித்து வருகிறது. பாகியாத் உள்ளிட்ட பல அரபு மதரஸாக்களின் முதர்ரிஸ்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் இதுபற்றிய தொகுப்பு நூல் வெளியிடப்படும்,தொடர்ந்து காஷிபுல் ஹுதா செய்து வரும் மறைமுக வஹாபிஸம் பற்றி விழிப்புணர்வை மக்கள மத்தியில் ஏற்படுத்த தமிழகத்தின் பல பகுதிகளில் மாநாடுகளை நடத்தவும் லிபாஸ் திட்டமிட்டுள்ளது.

உங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதுங்கள். வஸ்ஸலாம்.
libas07@gmail.com

Monday, October 24, 2011

Saturday, October 15, 2011

பாகவிகள் சந்திப்பு பற்றி உருது பத்ரிகை செய்திகள்



பாகவிகள் சந்திப்பு பற்றி இரண்டு உருது பத்ரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

Wednesday, October 12, 2011

அஃலா ஹஜ்ரத் நினைவு விழா

காலை உணவு இடைவேளை







இரண்டாம் அமர்வு









முதல் அமர்வு










அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் கிருபையால் அகில இந்திய பாகவி ஆலிம்களின் சந்திப்பு அறிவிக்கப் பட்டிருந்த படி 11.10.2010 செவ்வாயன்று காலை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவைரை வேலூரில் எழுச்சியோடு நடைபெற்றது.


அலைஅலையால மக்கள் கூடினர் என்று சொல்வது தான் சாதாரண வ்ழக்கம், ஆனால் இந்த சந்திப்பு நிகழ்ச்சியை அலைஅலையான இடையூறுகளையும் தடைகளையும் தாண்டி அல்லாஹ் வெற்றி பெறச் செய்தான். அஃலா ஹஜ்ரத்தின் துஆ தம்மோடு இருந்தது என பாகவிகள் நெக்குறுகினர்.

தமிழக அமைச்சர் முஹம்மது ஜான், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், சர்ர்ச்சைக்குரிய சென்னை செல்வந்தர் அப்பல்லோ ஹனீபா தமிழக ஜமாத்துல் உலமா தலைவர் அப்துர் ரஹமான் மிஸ்பாஹி ஹஜ்ரத் உள்ளிட்ட பலர் தற்போதைய பாகியாத் நிர்வாகக்குழுவின் செயலாளர் மலுக்கு முஹம்மது ஹாஷிமின் செல்வத்துக்கு சேவகம் செய்து இச்சந்திப்பை தடுக்க முயன்றதாக தகவல் தெரிவித்தன.

எனினும் நல்லவர்களின் துஆவும், பாகவி ஆலிம்களின் பக்குவமான அதே நேரத்தில் உறுதியான நடவடிக்கை களும் நிகழ்ச்சியை வெற்றிகரணமாகியது. அல்ஹம்து லில்லாஹ்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஈஸால் தாவ்பு எனும் துஆ நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றிய புக்கைப்படங்கள்,


Friday, October 7, 2011

வருக வருக

செய்லாளரிடமிருந்து

அன்புமிக்க பாகவிகளே அஸ்ஸலாமு அலைக்கும்.

11.10.2011 அன்று வேலூரில் நடைபெற உள்ள நம்முடைய சந்திப்பு நிகழ்ச்சிக்கான் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

நிகழ்ச்சி குறித்த தகவல்களை அவ்வப்போது நம்முடைய இந்த பிளாக்கில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இப்போது கல்ந்து கொள்வோர் தங்களது பெயர்களை விரைவாக பதிந்து வருகின்றன. பல நூற்றுக்கணக்கான பாகவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ் மளையாள்ம் உருது மொழிகளைச் சேர்ந்த பல மூத்த முன்னாள் பாகவிகளும் இக்கூட்டத்தில் கலந்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நீங்களும் கலந்து கொள்ள முடிவு செய்தால் உங்களுக்கான வசதிகளைச் செய்வதற்கு வசதியாக கீழ் கானும் எண்ணில் உங்களது பெயர் மற்றும் தொலை பேசி எண்ணை sms செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அப்துல் கையூம் மௌலானா பாகவி 9094965052

வஸ்ஸலாம்.

Monday, October 3, 2011

செருசேரி ஜைனுத்தீன் முஸ்லியாருடன் லிபாஸ் குழுவினர் சந்திப்பு

இந்தியாவின் தலை சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரும் கேரள சமஸ்தாவின் பொதுச் செயலாளருமான செருச்சேரி ஷைகுனா ஜனுத்தீன் முஸ்லியார் மற்றும் தாருல் ஹுதா பல்கலை கழகத்தின் துணைவேந்தர் பஹாவுத்தீன் முஹம்ம்து நத்வி ஆகியோரை லிபாஸ் குழுவினர் சந்தித்தனர்.




A.P. முஸ்லியாருடன் லிபாஸ் குழுவினர் சந்திப்பு




இன்ஷா அல்லாஹ் வருகிற 11.10.11 அன்று வேலூரில் நடைபெறுகிற பாகவிகள் சங்கம் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக லிபாஸ் குழுவினர் கேரளா ஸகாபுத்துஸ்ஸுன்னிய்யாவின் நிறுவனரும் உலகப்புகழ் பெற்ற பாகவிகளில் ஒருவருமான A.P. அபூபக்கர் முஸ்லியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அன்னார் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

Sunday, October 2, 2011

“பாகியாத்தின் இன்றைய நிலையும் பாகவிகளின் பொறுப்பும்”
>
பாகவிகள் கலந்தாய்வு


இன்ஷா அல்லாஹ் வரும் 11.10.2011 செவ்வாயன்று வேலூரில் காலை 8 மணி முதல் “பாகியாத்தின் இன்றைய நிலையும் பாகவிகளின் பொறுப்பும்” என்ற கருத்தை மையமாமா கொண்டு ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலிருந்து பாகிவிகள் பங்கேற்கவுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
9443201037 9443709706 98043665506 9976104473 98402 77450

பாகவிகள் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
முன்பதிவு அவசியம்.

இங்கனம்
லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம்கள் சங்கமம்.


Wednesday, September 14, 2011

மரியாதைக்குரிய ஹாஷிம் சாஹிப் அவர்களுக்கு

தாங்கள் ஜாமியா அல்பாகியாதுஸ் ஸாலிஹாத்தின் செயலராக பொறுப்பேற்றதிலிருந்து சிறப்பான பல காரியாங்களை நிறைவேற்றினீர்கள். அல்ஹம்து லில்லாஹ். ஜஸாக்கல்லாஹ்.

அதே நேரத்தில் மூர்க்கத்தனமான உங்களது சில நடவடிக்கைகள் பாகியாத் அரபுக்க்ல்லூரிக்குள்ளும் தமிழக் மக்களிடமும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்த்யது.

பாகியாத் என்பது உங்களிடம் ஒப்படைக்கப் பட்ட அமானிதம் என்பதை நீங்கள் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் உணர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்தை நாங்கள் அறிவோம்.

காலப்போக்கில் தங்ககளை சிலர் தவறாக வழி நட்த்தியதால், அல்லது தங்களுடைய ஜமீன்தாரி மனப்போக்கினால் பாகியாத்தின் வரலாற்றில் தீய பல முடிவுகளை எடுத்தீர்கள். அதனால் பலமான் அதிருப்தி அடைந்த தமிழக மக்கள் பாகியாத்தின் மீது கொண்டிருந்த மரியாதையின் காரணத்தினாலும் தங்களது பிரம்மாண்டமான பண வச்தியின் மீது கொண்ட அச்சத்தினாலும் பொறுமை காத்தார்கள்.

பாகியாத்திற்கு சேவை செய்வதை தங்களது வாழ்க்கை இலட்சியமாக கொண்டு பாகியாத்தின் புகழ் உல்கெலாம் பரவ காரணமாக் இருந்த கடப்பா அப்துல் ஜப்பார் ஹஜ்ரத் எச். கமாலுத்தீன் ஹஜ்ரத் , பிஎஸ்பி ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் உள்ளிட்ட பாகியாத்தின் மூத்த பேராசிரிய பலரையும் பாகியாத்தின் பைலாவில் இல்லாத ரிட்டயர் மெண்ட என்ற வார்த்தையை பயன்படுத்தி வீட்ட்டுக் அனுப்பினீர்கள்.

உங்களாலும் உங்களைச் சார்ந்தவர்களாலும் அடிக்கடி நினைவு கூறப்படுகிற தேவ்பந்த அரபுக்கல்லூரியில் ஆசிரியர்களை மாணவர்கள் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு வந்து வகுப்பறையில் உட்கார வைப்பதையும் அவர்களது வாயுக்கு நேரே மைக்கை வைத்து அதன் வழியாக பாடம் கேட்கும் நடை முறை இருப்பதையும் நீங்கள் அறியாமல் போனதென்ன? உங்களது ஊர்க்கார்ர் மொளாலான யாகூப் ஹஜரத் இன்னும் காஷிபுல் ஹூதா அரபுக்கல்லூரியில் நாஜிராக தொடர்வதையும் நீங்கள் உணராமல் போனதேன்ன?

நீங்கள் ஜாமியா அல்பாகியாத்தின் பேராசிரியர்களை உங்களது தோல்மண்டியின் துப்புறவுப் பணியாளர்களைப்போல நட்த்துகிறீர்கள் என்பதை மர்ஹ்ம் கமாலுத்தீன் ஹ்ஜரத் அவர்கள் தங்களிடம் நேரடியாக குறிப்பிட்டிருப்பதை நீங்கள உணரவே இல்லை போல தெரிகிறது.

இந்த ஆண்டு அல்பாகியாத்தின் இரண்டு மரியாதைக்குரிய உஸ்தாதுகளை பணி நீக்கம் செய்துள்ளீகள். மொலானா சலீம் ஹ்ஜ்ரத், மௌலானா முஹ்தார் ஹ்ஜ்ரத் ஆகிய இருவரும் தகுந்த காரண்ம் இன்றி உங்களால் நீக்கப்பட்டுள்ளார்கள். இதில் ஒருவர் மூத்த ஆசிரியர்ர், மற்றொருவர் உயர் வகுப்புகளுக்கு பாட்ம் நட்த்துகிறவர். பாகியாத்தில் தற்போது உங்களாலும் உங்களைச் சார்ந்தவர்களாகும் திணிக்கப்பட்டுள்ள தகுதி அற்ற பலரையும் விட தரத்திலும் தகுதியிலும் உயர்ந்தவர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்களை உங்களது வீட்டு வேலைகார்ர்களை விட கேவலமாக நட்த்தியுள்ளிர்கள்.

முஹதார் உஸ்தாது உங்களது வீட்டை தேடி வந்து நீங்கள் தூங்கி எழும் வரை காத்திருந்து உங்களை சந்தித்து “ என் பிள்ளைகள் இங்குள்ள பள்ளிக் கூடங்களில் படிக்கிறார்கள். அவர்களை நான் திடீரென வேறு ஊருக்கு மாற்ற முடியாது ஆக்வே இந்த ஒரு வருட்த்திற்கு இங்கு பணியாற்ற அனுமதியுங்கள் என்று கேட்ட போது “யாரை கேட்டு உங்களது பிள்ளைகளை இங்கு கூட்டிட்டு வந்தீங்க!”பாகியாத் நிரந்தரம்னு நெனச்சீங்களா? என்று கேட்டுள்ளீர்கள்.

செயலாளர் அவர்களே! மேல்விஷாரத்தின் மலிக்கான உங்களிடமிருந்து பிர் அவ்னிய அகம்பாவத்தில் இந்தச் சொற்கற்கள் வெளியாகி உள்ளன.

எங்களுக்கு சோறு போட்டீர்கள் என்பதற்காக எங்களுக்கு தீனை கற்பிக்கிற உஸ்தாதுகளிடம் நீங்கள் இவ்வாறு நட்ந்து கொள்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.

மறந்து விடாதீர்கள்! துன்யாவை நிரந்தரமானது என்று கருதியா நீங்கள் சொர்க்கத்தை போல மாளிகை கட்டி அதில் வாழ்கிறீர்கள்?

நல்ல வேளை. என்னை கேட்டா புள்ள பெத்தீங்க என்று கேட்காமல் விட்டீர்கள். அந்த அளவில் தமிழ் பேசும் ஆலிம்களின் மானம் தப்பித்தது.

தங்களுடை இந்த பேச்சும் நடவடிக்கையும் எங்களையும் எங்களை போன்ற தமிழக மற்றும் கேரள ஆலிம்களை பெரிதும் பாதித்துள்ளது. ஆழ்ந்த மனவருத்த்தை கொடுத்துள்ளது.

ஆக்வே! தகுந்த காரணமில்லாமல் வெளியேற்றப் பட்டுள்ள உஸ்தாதுகளை மீண்டும் உடனடியாக பணியில் சேர்க்குமாறு மிக்க அன்புடனும் பணிவுடனும் உங்களை கேட்டுக் கொள்கிறோம்.- பிச்சை போடுகிற மாதிரி இல்லாமல் மனிதாபி மானத்துடனும் மரியாதையுடனும் அவர்கள் விச்யத்தில் நட்ந்து கொள்ளுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம்.

இப்போதைக்கு தமிழக்ம் முழுக்க பரவியுள்ள பாகவிகள் ஒரு சிலரின் கோரிக்கை இது. நாங்கள் மொத்தமாக உங்களது வீட்டுக்கு முன் – அல்லது பாகியாத் பற்றிய முடிவுகளை தீர்மாணிக்கிற காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரிக்கு முன் - திர்ண்டு வந்து ஒரு அழுகைப் போராட்ட்த்தை நட்த்தினால் தான் உங்களது மனம் இரங்கும் என்றால் அதற்காகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் எனபதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரிய வ்ழையையும் அதன் படி செயல்படும் வாய்ப்பையும் தந்தருள்வானாக!

தங்களன்புள்ள

1
எண் பெயர் முகவரி பட்டம் பெற்ற் ஆண்டு கையொப்பம்
1 மொள்லவி அப்துல் அஜீஸ் பாஜில் பாகவி
இமாம், கரும்புக்கடை பள்ளிவாசல், கோவை
போன்: 1986














2011- ஜாமியா அல்பாகியாத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட உஸ்தாதுகளை மீண்டும் பணியில் சேர்க்குமாறும் உஸ்தாதுகளை பணியில் சேப்பதிலும் நீக்குவதிலும் பாக்கியாத்தின் பாரம்பரிய அணுகுமுறைகளை கடைபிடிக்குமாறு நாங்கள் கோருகிறோம்.


We request that the proffessors dissmissed from jamia al baqiyathus salihath in sep 2011 be reinstated immidiatly and we also humbly request you to follow the procedures and ruls of laid down by baqiyathus salihath in appointing and dissmising of the proffessors in future.

Name & Address Year of passing Signatur

Monday, January 17, 2011

ஒரு முக்கிய அறிவிப்பு

அன்பான நண்பர்களே!
2009 மார்ச் மாதத்தில் மதுரையில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு பிறகு பெரிய அளவில் நிகழ்ழ்சி எதையும் லிபாஸ் நடத்தவில்லை என்ற மன்க்குறை உங்களைப் போலவே எங்களுக்கும் உள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலைகளும் பணிப்பளுவும் தான் காரணம். இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆலிம்களுக்கு பயனுள்ள ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு வருகிறோம். நிகழ்ச்சி இறுதி வடிவம் பெற்றவுடன் தெரிவிக்கிறோம்.
அல்லாஹ் போதுமானவன்