Monday, December 5, 2011

அன்பு நிறைந்த ஆலிம்களே நணபர்களே

அன்பு நிறைந்த ஆலிம்களே! நணபர்களே!
பாகியாத்தின் வரலாறு மற்றும் மஸ்லக் பற்றி காஷிபுல் ஹுதாவிலிருந்து வெளிவருவருகிற மனாருக் ஹுதா மாத இதழில் வெளியான செய்திகள் குறித்து பலரும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

உத்தமர்களாவும், புத்திசாலிகளைப் போலவும் வேடமிட்டு புரட்டு வாதம் செய்வோர் அவர்களது ஆட்களை திருப்திப் படுத்துவதற்காக அல்லது தங்களது மனப் புகைச்சலை தீர்த்துக் கொள்வதற்காக " நாங்களும் எழுதிட்டோமல்லே " என்று காட்டுவதற்காக நிறையப் பக்கங்களை பாழ்படுத்தியுள்ளனர்.

எனினும் தொடர்ந்து இவர்கள் எந்த தப்பு வாதங்களை தப்பாது செய்து வருகிறார்களோ அதெற்கெல்லாம் பதிலளிக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை லிபாஸ் உணர்ந்திருக்கிறது. பாகியாத்தின் வரலாறு பாகியாத்தின் மஸ்லக், பாகியாத்திற்கும் தப்லீக்கிற்கும் இடையே உள்ள தொடர்பின் நிலை, மௌலானா யாகூப் விஷாரமி செய்து வருகிற ஒரு தலைப்பட்சமான பொய்ப்பிரச்சாரம் அவர் பயன்படுத்திய குயுக்தியான வழிகள் இன்றைக்கு பாகியாத் அடைந்திருக்கிற பின்ண்டைவு அதை மேம்படுத்து வதற்கான தீர்வுகள் வழிமுறைகளைப் பற்றி விரிவான ஒரு தகவல் கையேட்டை லிபாஸ் தாயாரித்து வருகிறது. பாகியாத் உள்ளிட்ட பல அரபு மதரஸாக்களின் முதர்ரிஸ்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் இதுபற்றிய தொகுப்பு நூல் வெளியிடப்படும்,தொடர்ந்து காஷிபுல் ஹுதா செய்து வரும் மறைமுக வஹாபிஸம் பற்றி விழிப்புணர்வை மக்கள மத்தியில் ஏற்படுத்த தமிழகத்தின் பல பகுதிகளில் மாநாடுகளை நடத்தவும் லிபாஸ் திட்டமிட்டுள்ளது.

உங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதுங்கள். வஸ்ஸலாம்.
libas07@gmail.com

No comments: