Tuesday, November 6, 2007

தொடக்க விழா தீர்மாணங்கள்

அல்லாஹ்வின் கிருiபாயல் கடந்த 11.07.07 . புதன் அன்று மதுரை சர்வேயர் காலனி முனவ்வரா கல்வி வளாகத்தில் நடைபொற்ற லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம்கள் சங்கமம் தொடக்க விழா அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்கள் நினைவு விழா கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மாணங்கள்.
இஸ்லாம் எனும் சத்திய நெறியை சளைக்காமல் போதிக்கவும் சுன்னத்தை பின்பற்றி பித்அத்களை களைவும் அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழிகாட்டுதலக்கு ஏற்ப உற்சாகத்தோடும் ஊக்கத்தோடும் செயலாற்றுவது என லஜனத்துல் இர்ஷாத் உறுதி ஏற்கிறது.
தென்னிந்தியாவில் தீன் பயிர் வளரவும் செழிக்கவும் உழைத்த அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களுக்கும் அவர்களுக்கு துணை நின்ற பெரியோர்களுக்கும், உதவியாக இருந்த புரவலர்களுக்கும் லஜ்னதுல் இர்ஷாத் தனது மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்கி, அன்னார்களது பிழைகளை மன்னித்து உயர்ந்த மறுமைப் பேற்றை அவர்களுக்கு வழங்குமாறு வல்ல நாயனை இக்கூட்டம் உள்ளம் உருக இறைஞ்சுகிறது.
அல்பாகியாதுஸ்ஸாலிஹாhத்தின் தற்போதைய விடுதி வளாகத்தை அற்புதமாக நிர்மாணித்து, பேராசிரியப் பெருமக்களுக்கு தகுந்த ஊதிய உயர்வும் குடியிருப்பு வசதியும் செய்து கொடுத்த இப்போதைய நிர்வாகக்குழுவினருக்கும் இவற்றை பொறுப்பேற்றுச் செய்த மலக் முஹம்மது ஹாசிம் அவர்களுக்கும் இக்கூட்டம் மிகுந்த நன்றியை தெரிவத்துக் கொள்கிறது. அன்னாருக்கும் அவருக்கு துணை நின்றோருக்கும் ஈருலக உயர் பாக்கியங்களை அல்லாஹ் வழங்க வேண்டுமென இக்கூட்டம் இறைஞ்சுகிறது.
வேலூ}; அல்பாகியாதுஸ்ஸாலிஹாhத் அரபுக்கல்லூரிக்கு தென்னிந்தியாவின் தாய்க்கல்லூரி என்ற அந்தஸ்த்தும் பொருமையும் தொடர்ந்து நீடிக்குச் செய்யவும் பாகவிகளின் எண்ணிக்கை பெருகவும் பயின்ற கல்லூரியின் மீதான நன்றியுனர்வின் அடிப்படையில் பாகியாத்தின் நலனில் அக்கறை கொண்டு செயல்படவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
தமிழகத்தில் நிலவிய பாரம்பரிய வழக்கப்படி பாகியத்தின் பத்வாவின் அடிப்படையில் மார்க்க விசயங்களுக்கு முடிவு காணும் நடைமுறையை பரவலாக்க கவனம் எடுத்தக் கொள்வது என்றும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது. பாகியாத்தின் பத்வா தொகுப்புக்களை தமழில் வெளிக் கொண்டுவர முயற்சி மேற் கொள்வதெனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
அல்பாகியாதுஸ்ஸாலிஹாhத்திற்கு பேராசிரியர்களை நியமிப்பதில் தென்றதொட்டு கடைபிடிக்கப்பட்ட வரும் அடிப்படைகளை தொடாந்து கைகொள்ளுமாறு மதிப்பு மிகுந்த பாகியாத் நிர்வாகக் குழுவை இக் கூட்டம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.
பாகவி ஆலிம்களிடையே ஒருங்கிணைப்பை எற்படுத்த வசதியாக அவர்களின் தகவல் வங்கி ஒன்றை உருவாக்குவதென இக்கூட்டம் தீர்மாணிக்கிறது. இதற்காக தங்களிடமுள்ள தகவல்களை அனுப்பித்தருமாறு தனது உறப்பினர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அல்பாகியத்தின் 150 ஆண்டின் நினைவாக அண்ணல் அஃலா ஹஜ்ரத் மற்றும் மன்னோடி பாகவிகளின் வாழ்கை வரலாற்ற ஆய்வுத்தொகுப்பு ஒன்றை வெளியிடுவதென இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
மக்களுக்கு தேவைப்படும் விசயத்தில் சட்டத் தெளிவை வழங்கவும் ஜனரஞ்சக ஊடகங்களில் இஸ்லாம் குறித்து வெளியாகும் தவறான விமர்ச்சனங்களுக்கு தக்க முறையில் பதில் பதில் தருவது எனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
ஆண்டு தோறும் ஒரு தகுந்த பாகவியை தேர்வு செய்து அவருக்கு ரூ10,000 வழங்குவதென இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
ஜும்ஆ உரைகளை நெறிப்படுத்தவும் செறிவூட்டவும் ஆனைத்து இமாம்களுக்கும் பயனளிக்கும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை லிபாஸ் ஜும்ஆ வாய்ஸ் என்ற பிரசுரம் ஒன்றை வெளியிடுவது எனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
இணைய தளம் ஒன்றை உருவாக்கி அதில் பாக்கவிகள் பற்றி தகவல்களையும் அவர்களது சேவைகளையும் பாகவிகளின் சிறந்த சொற் பொழிவுகளையும் இடம் பெறச் செய்வது எனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
இன்றைய உலகின் தேவைக்கு ஏற்ப பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு அனைத்து அலிம்களும் பயன்பெறும் வகையில் ஒரு நாள் பயிலரங்கு ஒன்றை இன்ஷா அல்லாஹ் வரகிற 2007 அக்டோபர் 23 ம் தேதி (ஷவ்வால் பிறை 10) கோவையில் நடத்துவது என இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.

ஜாமிஆ அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்

தமிழகத்தின் நிர்வாகத் தலைநகராக சென்னை இருந்தாலும் தமிழக முஸ்லிம்களை பொறுத்த வரை வேலூர் அவர்களது சமயத்தலைநகராக இருந்தது இப்போதும் இருக்கிறது. அதற்கு காரணம் அங்குள்ள அல்பாகியபதுஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரி.

தென்னிந்திய முஸ்லிம்கள் தங்களது சமயப்பிரச்சினைகளுக்கு கடைசித் தீர்வாக பாகியாத்தை கருதுகிறார்கள்.
ஆல் போல் தழைத்துச் செழித்து உலகின் அத்தனை பகுதிக்கும் தனது விழுதகளை படரச் செய்திருக்கம் பாகியாத் எனும் ஒற்றைச் சொல் தென்னிந்திய முஸ்லிம்களை பரவசப்படுத்தும் ஒரு சொல்லாக நூறறைம்பது ஆண்டுகளாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவின் தென் மாநிலங்களில் தமிழகத்திலும் கேரளாவிலும் தனிப்பெரும் மரியாதையை பெற்ற நிறுவனமாக பாகியாத் உள்ளது. இந்தப்பகுதியில் மார்க்கக் கல்விப்பணி வாழவும் வளரவும் பாகியாத்தே வழிவகுத்தது. இப்பகுதியல் உள்ள அனைத்து அரபு மதரஸாக்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாகியத்தை தழுவியவையே.
கல்வித் துறையில் பிரமாண்டமாகவும் நவீனமாகவும் வளர்ந்து விட்ட பல நிறுவனங்கள் கேரளாவில் உருவாகிவிட்ட போதும் அங்கு பாகியத்திற்கான தனி மதிப்பு இன்னும் இருக்கிறது என்பது எதார்த்தம். தென்கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் பாகவிகள் சிறப்பான பணிகளால் தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே இஸ்லாம் தழைத்தக் கொண்டிருக்கிறது என்ற சொன்னால் அது தவறாகாது.
உலகின் மூளை முடுக்கஙெ;கும் பல்லாஙிரக்கணக்கான் நற்;செயல்களுக்கு பாகியாத் காரணமாக அமைந்தது. சில பெயர்ப் பொருத்தங்கள் கணகச்சிதமாக அமந்து விடுவதண்டு. அதற்கு மிகச்சரியான ஒர உதாரணம் மஹம்மது (ஸல்) என்ற பெயர் என்றால் அந்த வரிசையில் இடம் பெற்ற மற்றொரு உதாரணம் பாகியத்.
1857 ல் கருவான இந்நிறுவனம் இந்தியவில் பெதுவாகவும் தென்னிந்தியாவில் குறிப்பாகவும் இந்தப்பாணியில் அமைந்த மூத்த முதன்மையான நிறுவனமாக இருக்கிறது.
இந்த பிரமாண்டமான நிறவனத்தை நிறுவி தென்னிந்தியாவில் ஒரு அமைதியான மார்க்கப்புரட்சிக்கு வித்திட்ட மதிப்பும் மேன்மையும் பெருந்தகைதான் ஷம்சுல் உலமா அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்கள். ஆண்ணார் தமது தூய தொண்டின் பயணாய் தென்னிந்திய மக்களிடையே மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்றிருந்தார்கள். அவர்களது வாழ்வும் வழிகாhட்டுதல்களும் என்றென்றைக்கும் தேவைப்படபவை.

Monday, November 5, 2007

கோவை பயிலரங்கம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23.10.2007 ம் தேதி செவ்வாய்க்கிழமை கோவை சங்கமம் திருமண மண்டபத்தில் ஆலிம்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் காலை 10 மணிக்கு துவங்கியது.லிபாஸின் தலைவர் மௌலானா அல்ஹாஜ் ஜியாவுத்தீன் ஹஜ்ரத் தலைமை தாங்கினார். கேiவை ராம்நகர் பள்ளிவாசல் இமாம் பாருக் ஹஜ்ரத் கிராத் ஓத, ஏரல் பீர்முஹம்மது பாகவி கீதமிசைக்க மேலப்பாளையம் காஜா முஈனுத்தீன் பாகவி அவர்களின் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த 65 உலமாக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆரம்பமாக மொழிவளம் குறித்து வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் முன்னாள் தமிழ்துறை தலைவர் பேராசரியர் தி.மு. அப்துல் காதிர் அவர்கள் வகுப்பு நடத்தினார்கள். வாரந்தோரும் ஜும்ஆ மேடை வழியாகவும் இன்னும் பல கூட்டங்கள் வழியாகவும் மக்களை சந்தித்து உரையாடுகிற வாயப்புப் பெற்ற உலமாக்கள் தங்கள் மொழிவளத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் அதற்கான பயிற்சி பற்றியும் தன் உரையில் தெளிவாக குறிப்பிட்டார்கள். உலமாக்களுக்கு மிகவும் பயனுள்ள உரையாக இது அமைந்தது. அடுத்து ஆளுமைத் திறன் என்ற தலைப்பில் கோவையைச் சார்ந்த ஜனாப். நாஸர் அவர்கள் வகுப்பு நடத்தினார்கள். இவர் இந்தியாவில் மட்டுமின்றி பல வெளிநாடுகளுக்கும் சென்று தன்முனைப்பு பயிற்சி நடத்துகிற ஒரு சிறந்த பயிற்சியாளர். பெப்ஸி போன்ற பல முன்னணி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி இவரைக் கொண்டு தமது ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன. அத்தகைய ஒரு சிறந்த இளம் பயிற்சியாளரான இவர் சுமார் 2 மணிநேரங்கள் சுவை குன்றாது தன் பயிற்சி வகுப்பபை நடத்தினார். இவரது உரை வித்தியாசமாகவும் ஆலிம்களுக்கு மிகவும் பிரயேஜனமாகவும் இருந்தது.ளுஹர் தொழுகைக்கும் மதிய உணவிற்கும் பிறகு வேலூர் அல்பாகியாதுஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.பி.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் அவர்கள் ஆன்மீக ரீதியில் ஆலிம்கள் தங்ளை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்தவம் பற்றி உரை நிகழ்த்தினார்கள். தமது பழைய மாணவர்களை சந்தித்த நெகிழ்ச்சி அவர்களுக்கும் தமது ஆசானை சந்தித்த மகிழ்ச்சி மாணவர்களுக்குமாக ஒரு இனிய அனுபவமாகவும் அவர்களது உரை அமைந்திருந்தது. ஆதன் பின்னர் அரசியல் அதிகாரம் என்ற தலைப்பில் கோவை அரசு கலைக் கல்லூhயின் அரசியல் அறிவியல் துறை விரிவுரையாளர் போராசிரியர் கணகராஜ் அவர்கள் பேசினார்;. இந்திய அரசியல் அமைப்பு பற்றியும் அரசியலில் பங்கேற்கும் வழிமுறை பற்றியும் குறிப்பாக வாக்குச்சீட்டின் வலிமையைப் பற்றியும் சுருக்கமான நேரத்தில் தெளிவான கருத்துக்களை எடுத்துரைத்தார். நிறைவாக கோவை அப்துல் அஜீஸ் பாகவி கணிணியின் பயன்பாடு பற்றியும் இன்டர் நெட்டில் மலிந்து கிடக்கிற தகவல் களஞ்சியங்கள் பற்றியும் செயல்முறை விளக்கப் பயிற்சியளித்தார். மாலை 5 மணிக்கு நிறைவு செய்யத் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சி இடைவெளி இல்லாமல் இரவு 7 மணிவரை நீண்டது எனினும் பலரும் அர்வத்தோடு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதே போல வருகை தந்த ஒவ்வொரு ஆலிமும் ரூபாய் 50 பதிவுக்கட்டணம் செலத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்குர்ஆன், ஹதீஸ் திரட்டு, இஸ்லாமிய வரலாறு ஆகிய தலைப்புக்களை கொண்ட குறுந்தகடுகளும் இன்டர்நெட்டிலிருந்து இறக்கம் செய்யப்பட்ட மின்னனு நூலான இமாம் நவவி (ரஹ்) அவர்களின் புஸ்தானுல் ஆரிபின் என்ற நூலின் அச்சுப்பிரதியும் வழங்கப்பட்டன.இன்ஷா அல்லாஹ் வருகிற 2008 பிப்ரவரி மாதத்தில் ஆலிம்களின் சொற்பொழிவுத்திறனை மேம்படுத்து வகையில் தகுந்த நபர்களைக் கொண்டு சேலம் நகரில் ஒரு நாள் பயிற்சி பட்டரை நடத்துவது என்ற தீர்மாணத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்

லிபாஸ் நிர்வாகக்குழு

லிபாஸ் நிர்வாகக்குழு

தவைர்:
மௌலவி பி.எம் ஜியாவுதின் பாகவி (அய்யம் பேட்டை)
9443306269
செயலாளர்:
அ. அப்துல் அஜீஸ் பாகவி (கோவை)
9443709706
பொருளாளர்:
பி.ஏ.காஜா முஈனுத்தீன் பாகவி (மேலப்பாளையம்)
9443201037

உறுப்பினர்கள:

ஏ. பீர்முஹம்மது பாகவி (மதுரை)

ஏஸ்.அப்துல் ஜப்பார் பாகவி(புதுக்கோட்டை)

எஸ்.எஸ்.அஹ்மது பாகவி(தூத்துக்குடி)

அப்துர் ரஹீம் பாகவி(பேட்டை)

எம்.ஜபருல்லா பாகவி(திருப்பூர்)

எஸ்.முஹம்மது ரபீஉத்தீன் பாகவி(புதுக்கோட்டை)
முஹம்மது அபுதாஹிர் பாகவி(சேலம்)

முஹம்மது இபுறாகீம் பாகவி(கோவை)

எஸ்.என். ஜாபர் சாதிக் பாகவி(சென்னை)
அபுதாஹிர் பாகவி(சென்னை)
மெலானா அப்துல் கையூம் பாகவி(எஸ்.பி.பட்டினம்)
நூர் முஹம்மது பாகவி (அதிரை)
ஏ.அப்துர்ரஹீம் பாகவி(அத்திக்கடை)
அஷ்ரப் அலி பாகவி(பள்ளபட்டி)
பைஜீர் ரஹ்மான் பாகவி(ஈரோடு)
எஸ். அப்துல் ஹக்கிம்பாகவி(மங்கலக்குடி)
அபுஸ்ஸவூத் பாகவி(மார்க்கம்பட்டி)
ஏ.செய்யத் அபுதாஹிர் பாகவி(தஞ்சை)
அப்துல் லத்தீப்(ஏர்வாடி)
எஸ்.முஹம்மது இஸ்ஹாக் பாகவி(தாராபுரம்)