Monday, November 25, 2013

பாக்கியாத் 150 ஆண்டு விழா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள ஆலிம்களுக்கு 

பாக்கியாதுஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரியில் நடைபெற இருக்கிற 150 ஆண்டு விழாவில் கலந்து கொள்வது குறித்து லிபாஸீன் கருத்து என்ன என்று தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பாக்கியாத்தின் 150 ஆண்டுவிழா என்ற ஒரு மகிழ்ச்சியான அம்சத்தின் உள்ளே மறைந்திருக்கிற பல சேதாரங்களை எடை போட வேண்டியிருக்கிறது. பாக்கியாத்தை தற்போது கட்டுப் பாட்டில் வைத்துள்ளவர்கள்  கடந்த காலங்களில் செய்த  சீர்குலைவு நடவடிக்கைகளை எண்ணிப்பார்த்து தற்போதைய பசப்பான அழைப்பில் மயங்கிவிடாமல் ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இன்ஷா அல்லாஹ் விரைவில் லிபாஸீன் செய்ற்குழு ஒரு தெளிவான முடிவை தரும். அதுவரை பொறுத்தருள்க!

தொலைபேசியில் விசாரிக்கிற ஒவ்வொருவரிடமும் விரிவாக செய்திகளை பரிமாறிக் கொள்ள நேரம் சம்மதிக்கவில்லை .

இன்ஷா அல்லாஹ் லிபாஸீன் தீர்மாணம் இந்த தளத்தின் வழியேயும்  கடிதங்கள் மூலமாகவும் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

அதுவரை பாக்கியாத் மேன்மைக்கு தொடர்ந்து துஆ செய்து கொண்டிருப்போம்.

வஸ்ஸலாம்.
அப்துல் அஜீஸ் பாகவி