Tuesday, November 6, 2007
தொடக்க விழா தீர்மாணங்கள்
இஸ்லாம் எனும் சத்திய நெறியை சளைக்காமல் போதிக்கவும் சுன்னத்தை பின்பற்றி பித்அத்களை களைவும் அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழிகாட்டுதலக்கு ஏற்ப உற்சாகத்தோடும் ஊக்கத்தோடும் செயலாற்றுவது என லஜனத்துல் இர்ஷாத் உறுதி ஏற்கிறது.
தென்னிந்தியாவில் தீன் பயிர் வளரவும் செழிக்கவும் உழைத்த அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களுக்கும் அவர்களுக்கு துணை நின்ற பெரியோர்களுக்கும், உதவியாக இருந்த புரவலர்களுக்கும் லஜ்னதுல் இர்ஷாத் தனது மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்கி, அன்னார்களது பிழைகளை மன்னித்து உயர்ந்த மறுமைப் பேற்றை அவர்களுக்கு வழங்குமாறு வல்ல நாயனை இக்கூட்டம் உள்ளம் உருக இறைஞ்சுகிறது.
அல்பாகியாதுஸ்ஸாலிஹாhத்தின் தற்போதைய விடுதி வளாகத்தை அற்புதமாக நிர்மாணித்து, பேராசிரியப் பெருமக்களுக்கு தகுந்த ஊதிய உயர்வும் குடியிருப்பு வசதியும் செய்து கொடுத்த இப்போதைய நிர்வாகக்குழுவினருக்கும் இவற்றை பொறுப்பேற்றுச் செய்த மலக் முஹம்மது ஹாசிம் அவர்களுக்கும் இக்கூட்டம் மிகுந்த நன்றியை தெரிவத்துக் கொள்கிறது. அன்னாருக்கும் அவருக்கு துணை நின்றோருக்கும் ஈருலக உயர் பாக்கியங்களை அல்லாஹ் வழங்க வேண்டுமென இக்கூட்டம் இறைஞ்சுகிறது.
வேலூ}; அல்பாகியாதுஸ்ஸாலிஹாhத் அரபுக்கல்லூரிக்கு தென்னிந்தியாவின் தாய்க்கல்லூரி என்ற அந்தஸ்த்தும் பொருமையும் தொடர்ந்து நீடிக்குச் செய்யவும் பாகவிகளின் எண்ணிக்கை பெருகவும் பயின்ற கல்லூரியின் மீதான நன்றியுனர்வின் அடிப்படையில் பாகியாத்தின் நலனில் அக்கறை கொண்டு செயல்படவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
தமிழகத்தில் நிலவிய பாரம்பரிய வழக்கப்படி பாகியத்தின் பத்வாவின் அடிப்படையில் மார்க்க விசயங்களுக்கு முடிவு காணும் நடைமுறையை பரவலாக்க கவனம் எடுத்தக் கொள்வது என்றும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது. பாகியாத்தின் பத்வா தொகுப்புக்களை தமழில் வெளிக் கொண்டுவர முயற்சி மேற் கொள்வதெனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
அல்பாகியாதுஸ்ஸாலிஹாhத்திற்கு பேராசிரியர்களை நியமிப்பதில் தென்றதொட்டு கடைபிடிக்கப்பட்ட வரும் அடிப்படைகளை தொடாந்து கைகொள்ளுமாறு மதிப்பு மிகுந்த பாகியாத் நிர்வாகக் குழுவை இக் கூட்டம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.
பாகவி ஆலிம்களிடையே ஒருங்கிணைப்பை எற்படுத்த வசதியாக அவர்களின் தகவல் வங்கி ஒன்றை உருவாக்குவதென இக்கூட்டம் தீர்மாணிக்கிறது. இதற்காக தங்களிடமுள்ள தகவல்களை அனுப்பித்தருமாறு தனது உறப்பினர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அல்பாகியத்தின் 150 ஆண்டின் நினைவாக அண்ணல் அஃலா ஹஜ்ரத் மற்றும் மன்னோடி பாகவிகளின் வாழ்கை வரலாற்ற ஆய்வுத்தொகுப்பு ஒன்றை வெளியிடுவதென இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
மக்களுக்கு தேவைப்படும் விசயத்தில் சட்டத் தெளிவை வழங்கவும் ஜனரஞ்சக ஊடகங்களில் இஸ்லாம் குறித்து வெளியாகும் தவறான விமர்ச்சனங்களுக்கு தக்க முறையில் பதில் பதில் தருவது எனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
ஆண்டு தோறும் ஒரு தகுந்த பாகவியை தேர்வு செய்து அவருக்கு ரூ10,000 வழங்குவதென இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
ஜும்ஆ உரைகளை நெறிப்படுத்தவும் செறிவூட்டவும் ஆனைத்து இமாம்களுக்கும் பயனளிக்கும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை லிபாஸ் ஜும்ஆ வாய்ஸ் என்ற பிரசுரம் ஒன்றை வெளியிடுவது எனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
இணைய தளம் ஒன்றை உருவாக்கி அதில் பாக்கவிகள் பற்றி தகவல்களையும் அவர்களது சேவைகளையும் பாகவிகளின் சிறந்த சொற் பொழிவுகளையும் இடம் பெறச் செய்வது எனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
இன்றைய உலகின் தேவைக்கு ஏற்ப பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு அனைத்து அலிம்களும் பயன்பெறும் வகையில் ஒரு நாள் பயிலரங்கு ஒன்றை இன்ஷா அல்லாஹ் வரகிற 2007 அக்டோபர் 23 ம் தேதி (ஷவ்வால் பிறை 10) கோவையில் நடத்துவது என இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
ஜாமிஆ அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்
தென்னிந்திய முஸ்லிம்கள் தங்களது சமயப்பிரச்சினைகளுக்கு கடைசித் தீர்வாக பாகியாத்தை கருதுகிறார்கள்.
ஆல் போல் தழைத்துச் செழித்து உலகின் அத்தனை பகுதிக்கும் தனது விழுதகளை படரச் செய்திருக்கம் பாகியாத் எனும் ஒற்றைச் சொல் தென்னிந்திய முஸ்லிம்களை பரவசப்படுத்தும் ஒரு சொல்லாக நூறறைம்பது ஆண்டுகளாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவின் தென் மாநிலங்களில் தமிழகத்திலும் கேரளாவிலும் தனிப்பெரும் மரியாதையை பெற்ற நிறுவனமாக பாகியாத் உள்ளது. இந்தப்பகுதியில் மார்க்கக் கல்விப்பணி வாழவும் வளரவும் பாகியாத்தே வழிவகுத்தது. இப்பகுதியல் உள்ள அனைத்து அரபு மதரஸாக்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாகியத்தை தழுவியவையே.
கல்வித் துறையில் பிரமாண்டமாகவும் நவீனமாகவும் வளர்ந்து விட்ட பல நிறுவனங்கள் கேரளாவில் உருவாகிவிட்ட போதும் அங்கு பாகியத்திற்கான தனி மதிப்பு இன்னும் இருக்கிறது என்பது எதார்த்தம். தென்கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் பாகவிகள் சிறப்பான பணிகளால் தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே இஸ்லாம் தழைத்தக் கொண்டிருக்கிறது என்ற சொன்னால் அது தவறாகாது.
உலகின் மூளை முடுக்கஙெ;கும் பல்லாஙிரக்கணக்கான் நற்;செயல்களுக்கு பாகியாத் காரணமாக அமைந்தது. சில பெயர்ப் பொருத்தங்கள் கணகச்சிதமாக அமந்து விடுவதண்டு. அதற்கு மிகச்சரியான ஒர உதாரணம் மஹம்மது (ஸல்) என்ற பெயர் என்றால் அந்த வரிசையில் இடம் பெற்ற மற்றொரு உதாரணம் பாகியத்.
1857 ல் கருவான இந்நிறுவனம் இந்தியவில் பெதுவாகவும் தென்னிந்தியாவில் குறிப்பாகவும் இந்தப்பாணியில் அமைந்த மூத்த முதன்மையான நிறுவனமாக இருக்கிறது.
இந்த பிரமாண்டமான நிறவனத்தை நிறுவி தென்னிந்தியாவில் ஒரு அமைதியான மார்க்கப்புரட்சிக்கு வித்திட்ட மதிப்பும் மேன்மையும் பெருந்தகைதான் ஷம்சுல் உலமா அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்கள். ஆண்ணார் தமது தூய தொண்டின் பயணாய் தென்னிந்திய மக்களிடையே மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்றிருந்தார்கள். அவர்களது வாழ்வும் வழிகாhட்டுதல்களும் என்றென்றைக்கும் தேவைப்படபவை.
Monday, November 5, 2007
கோவை பயிலரங்கம்
லிபாஸ் நிர்வாகக்குழு
லிபாஸ் நிர்வாகக்குழு
தவைர்:
மௌலவி பி.எம் ஜியாவுதின் பாகவி (அய்யம் பேட்டை)
9443306269
செயலாளர்:
அ. அப்துல் அஜீஸ் பாகவி (கோவை)
9443709706
பொருளாளர்:
பி.ஏ.காஜா முஈனுத்தீன் பாகவி (மேலப்பாளையம்)
9443201037
உறுப்பினர்கள:
ஏ. பீர்முஹம்மது பாகவி (மதுரை)
ஏஸ்.அப்துல் ஜப்பார் பாகவி(புதுக்கோட்டை)
எஸ்.எஸ்.அஹ்மது பாகவி(தூத்துக்குடி)
அப்துர் ரஹீம் பாகவி(பேட்டை)
எம்.ஜபருல்லா பாகவி(திருப்பூர்)
எஸ்.முஹம்மது ரபீஉத்தீன் பாகவி(புதுக்கோட்டை)
முஹம்மது அபுதாஹிர் பாகவி(சேலம்)
முஹம்மது இபுறாகீம் பாகவி(கோவை)
எஸ்.என். ஜாபர் சாதிக் பாகவி(சென்னை)
அபுதாஹிர் பாகவி(சென்னை)
மெலானா அப்துல் கையூம் பாகவி(எஸ்.பி.பட்டினம்)
நூர் முஹம்மது பாகவி (அதிரை)
ஏ.அப்துர்ரஹீம் பாகவி(அத்திக்கடை)
அஷ்ரப் அலி பாகவி(பள்ளபட்டி)
பைஜீர் ரஹ்மான் பாகவி(ஈரோடு)
எஸ். அப்துல் ஹக்கிம்பாகவி(மங்கலக்குடி)
அபுஸ்ஸவூத் பாகவி(மார்க்கம்பட்டி)
ஏ.செய்யத் அபுதாஹிர் பாகவி(தஞ்சை)
அப்துல் லத்தீப்(ஏர்வாடி)
எஸ்.முஹம்மது இஸ்ஹாக் பாகவி(தாராபுரம்)