வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் அல்ஹாஜ் மவ்லானா மவ்லவி N. ரயீசுல் இஸ்லாம் ஹஜ்ரத் கிப்லா (சுமார் 85 வயது)
அவர்கள் உடல் நலக் குறைவால் 28-02-2012 செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 3.00 மணியளவில் வேலூரில் வஃபாத்தானார்கள்.
அன்னாரின் ஜனாஸா புதன்கிழமை 29-02-2012 ளுஹர் தொழுகைகுப் பின்னர் வேலூரில் நல் அடக்கம் செய்யப்ப்பட்டது. ஜனாஸா தொழுகை வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லுரி பள்ளிவாசலில் நடைபெற்றது.
ஜனாஸா தொழுகைக்கு முன் பாகியாத் அரபுக்கல்லூரியில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் பாகியாத்தின் முதல்வர் உஸ்மான் முஹ்யித்தீன் ஹஜ்ரத், பெங்களூர் அஸ்ரப் அலி ஹஜ்ரத், ஜஹீர் ஹஜ்ரத், லிபாஸின் பிரதிநிதிகளாக மௌலவி அப்துல் அஜீஸ் பாகவி, மௌலவி யூசுப் பாகவி ஆகியோருடன் பாகியாத்தின் முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாஸா தொழுகையில் பாகியாத்தின் செயலாளர்,ஹாஷிம் சாஹிப் ஷப்பீர் அலி ஹஜ்ரத், பி.எஸ்.பி ஹஜ்ரத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்ட மிகுதியின் காரணமாக பள்ளிவாசலில் உட்பகுதியில் ஜனாஸா தொழுகை நடத்தப் பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு மதிய உணவு மதரஸாவின் சார்பில் அஜீஜிய்யா ஷாதி கானாவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து, தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் அனைவரும் துஆ செய்வோமாக. ஆமீன்
No comments:
Post a Comment