Tuesday, February 21, 2012

கேரளா பாகவிகள் சந்திப்பு

அல்லாஹ்வின் கிருபையால் கேரள மாநில பாகவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள் கோழிக்கோடு டவர் அரங்கில் 16.02.2012 அன்று அகில இந்திய பாகவி அஸோஷியேசன் தலைவர் அஷ்ஷைக் காந்தபுரம் அபூபக்கர் பாகவி தலைமையில் நடைபெற்றது. கர்நாடகத்திலிருந்து மௌலானா ஜகீர் ஹஜ்ரத அவர்களும் தமிழகத்திலிருந்து மௌலானா P.A, காஜா முஈனுத்தீன் ஹஜ்ரத், அப்துல் அஜீஸ் பாகவி, பீர் முஹம்மது பாகவி, திருச்சி பிலால் பாகவி ஆகியோரும் ஆந்திரா தமிழகத்திலிருந்து மற்ற பல பாகவிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாகியாத்தின் செயலாளர் அல்ஹாஷிம் அவர்களிடம் முன்வைக்கப் பட உள்ள ஒரு கோரிக்கை பற்றி முடிவு செய்த்ததுடன் கேரளா பாகவி அஸோஸியேன் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.





1 comment:

Habibur Rahman said...

அல்ஹம்துலில்லாஹ் ,
எங்கே தமிழகம் முழுவதும் வாஹ்ஹாபிகளின் பித்அத்தில் மூழ்கிவிடுமோ , எனும் அச்சம் எங்களை போன்ற சாமானியர்களை கவலை கொள்ள செய்த நேரத்தில் உலமாக்களின் இந்த ஆரம்பம் ஆறுதல் அளிக்கிறது.
வெளிப்படையான வலிகேடர்களை விட தப்லீக் உண்மையான சொருபத்தை வெளியாக்கிய அல்லாஹுவுக்கே புகழ் அனைத்தும் .
உலமாக்களின் பெருவாரியானவர்களே தப்லீக் ஜமாஅத் பற்றி அறியாதவர்களாக இருக்கும் பொது பாமர மக்களின் நிலை கேட்கவே வேண்டாம். இந்நேரத்தில் தமிழக சுன்னத் ஜமாஅத் உலமாக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் உலமா சபையின் தலைவரும்,எங்கள் ஷெய்குமாகிய , அஷ் ஷேய்குள் காமில் ,அல் முஹிப்பிர் ரசூல் முகம்மதலி சைபுதீன் ஆலிம் ரஹ்மானி, பாகவி, காதிரி, ஸூஃபி அவர்களின் கரத்தை வலுப்படுத்துமாறு சுன்னத் ஜமாஅத் உலமாக்களை கேட்டு கொள்கிறேன்.

மேலும் விபரங்களுக்கு www.sufimanzil.org

இவண்,

ஷெய்குமார்களின் ஊழியன்,

முஹம்மது ஹபிபுர் ரஹ்மான் காதிரி